சேலம், தர்மபுரி மாவட்டங்களில் லேசான நில அதிர்வு - வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்

சேலம் மற்றும தர்மபுரி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
சேலம், தர்மபுரி மாவட்டங்களில் லேசான நில அதிர்வு - வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்
x
காலை 7.47 மணி அளவில் ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். சில இடங்களில் வீட்டின் ஓடுகள் கீழே விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. மணியனூர் பகுதியில் சில வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. நில அதிர்வு குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர், ஓமலூர், காடையம்பட்டி, சேலம் ஆகிய வட்டங்களில் 3 புள்ளி 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் தொடர்பான தகவல்களுக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்