பொறியியல் கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடக்கம் - அமைச்சர் அன்பழகன்
நடப்பாண்டு பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது.
மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தேசிய அளவில் ஜுனியர்களுக்கான ரக்பி விளையாட்டு போட்டியை அமைச்சர்கள் கே.பி அன்பழகன், செல்லூர் ராஜூஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பழகன், 5 கட்டமாக கலந்தாய்வு நடைபெறும் என்றும், 2 நாள் துணை கலந்தாய்வு நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார்.
Next Story