ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பலோ ஓட்டுநர் ஆஜர் - மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை அழைத்து சென்றது குறித்து கேள்வி

ஆறுமுகசாமி ஆணையத்தில், ஜெயலலிதாவை அப்பலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்ற ஓட்டுநர் சுரேஷ்குமார் ஆஜரானார்.
ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பலோ ஓட்டுநர் ஆஜர் - மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை அழைத்து சென்றது குறித்து கேள்வி
x
அறுமுகசாமி ஆணையத்தில் இன்று காலை ஆஜரான சுரேஷ் குமாரிடம்,   போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிகழ்வுகள் குறித்து விசாரணை நடைபெற்றது. ஒரு மணி நேரம் நடந்த விசாரணையின்போது, போயஸ் தோட்ட இல்லத்தில் எந்த நிலையில் ஜெயலலிதா இருந்தார், யாரெல்லாம் உடன் இருந்தார்கள் என்பது போன்ற கேள்விகளை ஆணைய வழக்கறிஞர்கள் எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த சுரேஷ்குமார், இருக்கையில் ஜெயலலிதா அமர்ந்து இருந்தததாகவும் அரை மயக்க நிலையில் ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில் ஏற்றியதாகவும் கூறினார். அப்போது சசிகலா, டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் உடன் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்