யார் இந்த செய்யாதுரை? சேகர் ரெட்டியுடன் என்ன தொடர்பு?

நாகராஜன் செய்யாதுரை யார்...? அவரது பின்னணி என்ன...? - பிரத்யேக தகவல்கள்
யார் இந்த செய்யாதுரை? சேகர் ரெட்டியுடன் என்ன தொடர்பு?
x
செய்யாதுரை யார்...?

மூன்றாவது நாளாக வருமான வரித் துறை சோதனை நடைபெற்றுவரும் நிலையில்,  சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரை யார்... அவரது பின்னணி என்ன என்பது குறித்த முழு தகவல்கள்.


நாகராஜன் செய்யாதுரை மூன்று நிறுவனங்களில் இயக்குனராக இருந்து வருகிறார்
 1. SPK Spinnerrs Pvt Ltd
 2. Sri Balaji Tollways Madurai Pvt Ltd, 
 3. SPKANDCO Exprressway Pvt Ltd 

* SPK Spinnerrs Pvt Ltd - நாகராஜனின் குடும்பத்தினரால் 1994 ஆம் தொடங்கப்பட்ட ஜவுளி நிறுவனம். 

* 2014 ஆம் ஆண்டு முதல் நாகராஜன் இந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்துவருகிறார். 

* இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 2.25 கோடி.

* Sri Balaji Tollways Madurai Pvt Ltd- என்ற நிறுவனம் சேகர் ரெட்டி, சுப்ரமணியம் பழனிச்சாமி மற்றும் நாகராஜன் செய்யாதுரை ஆகியோரால் பத்து லட்சம் முதலீட்டில், பிப்ரவரி 26, 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம்.

* துவங்கிய பத்து மாதத்தில் சேகர் ரெட்டி இந்நிறுவனத்திலிருந்து வெளியேறுகிறார். ஜெயலலிதா மறைவிற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது டிசம்பர் 2, 2016 ஆம் தேதி சேகர் ரெட்டி இயக்குனர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்கிறார். அவர் வசம் இருந்த 34% பங்குகள் கூடுதலாக நாகராஜன் வசம் வருகிறது.

* 2016 ஆம் ஆண்டு இந்நிறுவனத்திற்கு எந்த வருவாயும் இல்லை.

* 2017 - ஆம் ஆண்டு இந்நிறுவனம் 60,353 லாபம் ஈட்டுகிறது. அதுவும் வங்கி டெபாசிட் மூலம் கிடைக்கப்பெறுகிறது.

* பிப்ரவரி 23, 2018 - ஆம் ஆண்டு இந்நிறுவனத்தில் 52.25 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 52.35 கோடி
.
* SPKANDCO Exprressway Pvt Ltd - நிறுவனம் நாகராஜன் செய்யாதுரை மற்றும் அதே சுப்ரமணியம் பழனிசாமியால் பத்து லட்சம் முதலீட்டில் மார்ச் 12,2018 ஆம் தேதி துவங்கப்படுகிறது.

* இந்த மூன்று நிறுவனங்களின் தற்போதைய மதிப்பு 54.70 கோடி.

* ஆனால் நாகராஜன் தொடர்புடைய இடங்களிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதோ 170 கோடி ரொக்கம் மற்றும் 105 கிலோ தங்க கட்டிகள். இதன் பின்புலம் தான் வருமான வரித்துறை விசாரித்து வருகிறது.




Next Story

மேலும் செய்திகள்