ஜெயலலிதாவுக்கு இனிப்பு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல்

ஜெயலலிதாவுக்கு இனிப்பு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல் - அப்பல்லோ டாக்டர் விளக்கம்
ஜெயலலிதாவுக்கு இனிப்பு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல்
x
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுக சாமி கமிஷனில் சென்னை - அப்பல்லோ மருத்துவமனையின் நீரிழிவு டாக்டர் வெங்கட்ராமன் மற்றும் ஆவண காப்பக மேலாளர் கோவிந்தராஜன் இருவரும் ஆஜரானார்கள்.  அப்பல்லோ டாக்டர் ஜெயஸ்ரீ கோபால் ஆணையத்தில் அளித்த சாட்சியத்தில், ஜெயலலிதா ஆயிரத்து 200 கலோரிக்குள் இனிப்பு சாப்பிட்டிருந்தால் பிரச்சினை இல்லை என சாட்சியம் அளித்து உள்ளாரே என ஆணைய வழக்கறிஞர் கேட்டதற்கு, அப்படி கொடுத்திருந்தால் தவறு என டாக்டர் வெங்கட்ராமன் விளக்கம் அளித்தார். இதேபோல், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களை தவிர, வேறு ஆவணங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்றும் ஆவண காப்பக மேலாளர் கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்