கொதிக்கும் காப்பி கொட்டி உடலில் தீ காயத்துடன் துடித்த சிறுவன் - மருந்து இல்லை என கைவிரித்த ஆரம்ப சுகாதார நிலையம்

கொதிக்கும் காபி கொட்டி, உடலில் தீக்காயங்களுடன் ஆரம்ப சுகாதார நிலையம் வந்த சிறுவனுக்கு, மருந்து இல்லை என கூறி சிகிச்சை அளிக்காத மருத்துவரை உறவினர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கொதிக்கும் காப்பி கொட்டி உடலில் தீ காயத்துடன் துடித்த சிறுவன் - மருந்து இல்லை என கைவிரித்த ஆரம்ப சுகாதார நிலையம்
x
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியை சேர்ந்த மாரியப்பனின் 8 வயது மகன் திருமலை மணி. இன்று வீட்டில் இருந்தபோது, அவனது சகோதரி காபி போட்டு, அடுப்பில் இருந்து இறக்கியபோது, கை தவறி திருமலை மணி மீது கொட்டியது. அதில், திருமலை மணியின் கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. 

அலறி துடித்த சிறுவனை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால், அங்கு தேவையான மருந்து இல்லை என கூறி மருத்துவர் சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று சமாதானப்படுத்தினர். இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.

Next Story

மேலும் செய்திகள்