நியூட்ரினோ திட்டம் கடைசி மனிதரின் சந்தேகம் தீர்ந்த பின்னரே செயல்படுத்தப்படும் - திட்ட இயக்குனர்

தேனியில் அமைக்கப்படும் நியூட்ரினோ ஆய்வுத்திட்டம், கடைசி மனிதனின் சந்தேகம் தீர்ந்த பின்னரே செயல்படுத்தப்படும் என, திட்ட இயக்குநர் விவேக் தத்தார் தெரிவித்துள்ளார்.
நியூட்ரினோ திட்டம் கடைசி மனிதரின் சந்தேகம் தீர்ந்த பின்னரே செயல்படுத்தப்படும்  - திட்ட இயக்குனர்
x
தேனி மாவட்டம், பொட்டிபுரத்தில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டம் குறித்து, அத்திட்ட இயக்குநர் விவேக் தத்தார் மற்றும் விஞ்ஞானி வெங்டேசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விவேக் தத்தார், நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார். 

வளி மண்டலத்தில் காஸ்மிக் துகள்களுடன் கலந்து வரும், நியூட்ரினோ துகள்களை கண்டறியவே சுரங்கத்தில் ஆய்வு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய விஞ்ஞானி வெங்கடேசன், நியூட்ரினோ திட்டம் நீர் விழுங்கும் திட்டம் அல்ல என்றார்.  



Next Story

மேலும் செய்திகள்