வாகன ஓட்டியை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்...

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சுங்கச்சாவடியில், வாகன ஓட்டி ஒருவரை சுங்கச்சாவடி ஊழியர்கள் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாகன ஓட்டியை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்...
x
வாகன ஓட்டியை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தைச் சேர்ந்த விஷால் என்பவரும் அவரது நண்பர்களும், செங்குன்றம் சுங்கச்சாவடி வழியே சென்ற போது, உள்ளூர் தான் எனக் கூறி கட்டணம் செலுத்த மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, விஷாலுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. சுங்கச்சாவடி ஊழியர்கள், விஷாலையும் அவரது நண்பர்களையும் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த விஷால், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.   




Next Story

மேலும் செய்திகள்