ரேஷன் கடையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - கடை விற்பனையாளரை கடைக்குள் பூட்டிவைத்த பொதுமக்கள்

திருத்தணி அருகே ரேஷன் கடைக்கு அரிசி வாங்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கடை விற்பனையாளரை பொதுமக்கள் அடித்து கடைக்குள் வைத்து பூட்டி வைத்தனர்
ரேஷன் கடையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - கடை விற்பனையாளரை கடைக்குள் பூட்டிவைத்த பொதுமக்கள்
x
பெருங்களத்தூர் கிரமத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையில் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அரிசி வாங்க சென்றுள்ளார். அங்கு ஆள் இல்லாத நேரத்தில், கடை விற்பனையாளர் செல்வம் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளர். இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்றுக்கூடி,விற்பனையாளரை தாக்கி அவரை கடைக்குள் வைத்து பூட்டினர். பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் கடையை திறந்து செல்வத்தை மீட்டத்தால் கோபம் அடைந்த பொதுமக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பெண் ஒருவர் மண்ணெண்னை ஊற்றி தீகுளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரை தடுத்த போலீசார் சம்பந்தப்பட்டவர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் செல்வத்தை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்