நாமக்கல் : பிறந்த சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பெண் சிசு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பிறந்து சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பெண் சிசு போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
நாமக்கல் : பிறந்த சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பெண் சிசு
x
நாமக்கல் மாவட்டம், காடச்சநல்லூரில், உள்ள சத்யா நகரில், முட்புதர் ஒன்றில் பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், பெண் சிசு இருப்பது குறித்து பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார், குழந்தையை மீட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக, சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முட்புதரில் பெண் சிசுவை வீசியது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்