வெங்காய மண்டியில் வேலை கேட்டு முற்றுகை : போலீஸ் - தொழிலாளர்கள் இடையே தள்ளுமுள்ளு

திருச்சி காந்தி மார்கெட்டில் செயல்பட்டு வந்த வெங்காய மண்டி இட நெருக்கடி காரணமாக அரியமங்கலம் பால்பண்ணை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
வெங்காய மண்டியில் வேலை கேட்டு முற்றுகை : போலீஸ் - தொழிலாளர்கள் இடையே தள்ளுமுள்ளு
x
திருச்சி காந்தி மார்கெட்டில் செயல்பட்டு வந்த வெங்காய மண்டி இட நெருக்கடி காரணமாக அரியமங்கலம் பால்பண்ணை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக  அங்கு பார்த்து வந்த சுமை தூக்கும் கூலி தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் உடனடியாக வேலை வழங்க வலியுறுத்தி, அரியமங்கலம் பால்பண்ணை பகுதியில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து ஊர்வலமாக சென்று புதிய வெங்காய மண்டியை முற்றுகையிட முயன்ற போது, போலீஸாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து  200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்