நாகை மீனவர்களை சிறை பிடித்த ஆந்திர மீனவர்கள்...

ஆந்திர கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 19 பேரை அம்மாநில மீனவர்கள், சிறைபிடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மீனவர்களை சிறை பிடித்த ஆந்திர மீனவர்கள்...
x
நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 7 ஆம் தேதி, நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆந்திர கடல்பகுதியில், மீன் பிடிக்க சென்றனர். அப்போது, அத்துமீறி புகுந்ததாக கூறி, இரண்டு விசைப்படகுகள் மற்றும் 19 மீனவர்களை ஆந்திர மீனவர்கள், சிறைபிடித்தனர். இந்நிலையில், 19 மீனவர்களை மீட்டுத்தர கோரி, நாகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்