இளைஞர்கள் உழைப்பில் உருவான அதிநவீன பேருந்து நிழற்குடை

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் இளைஞர்கள் இணைந்து, அனைத்து வசதிகளையும் கொண்ட அதிநவீன பேருந்து நிழற்குடை ஒன்றை அமைத்துள்ளனர்.
இளைஞர்கள் உழைப்பில் உருவான அதிநவீன பேருந்து நிழற்குடை
x
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில், நிற்ககூட இடமில்லாமல் குப்பைகள் நிறைந்து காணப்பட்ட பேருந்து நிழற்குடையை மாற்ற வேண்டுமென அப்பகுதி இளைஞர்கள் முடிவு செய்தனர். அப்பகுதி மக்களிடம் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி கழிப்பறை, குடிநீர், கண்காணிப்பு கேமரா போன்ற அனைத்து வசதிகளையும் கொண்ட சுத்தமான நிழற்குடையாக மாற்றி அதை பராமரித்தும் வருகின்றனர். கீழ்பகுதியில் நிழற்குடையாகவும், மேல்பகுதியில் நூலகமாகவும் இந்த நிழற்குடை செயல்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு முன்மாதிரியாக திகழும் இந்த பேருந்து நிழுற்குடைக்கு அருகில் ஏடிஎம் வசதியும் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்