சென்னையில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை

சென்னை அடையாறில் தனியார் பள்ளி அருகே பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை
x
தாமோதிரபுரத்தை சேர்ந்த நில புரோக்கர் சுரேஷ், தனது இரு குழந்தைகளை அடையாறில் உள்ள தனியார் பள்ளியில் விட்டுவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். பள்ளியில் இருந்து சிறிது தூரம் சென்ற போது, அங்கு ஆட்டோவில் காத்திருந்த 4 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சுரேஷை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் பள்ளி அருகே நடந்த கொலை சம்பவம் அடையாறு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்