ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர் கைது

விருதுநகர் மாவட்டம் முழுவதும் குற்ற செயல்களை தடுக்க மாவட்ட கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர்.
ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர் கைது
x
ராஜபாளையம் அருகே,  நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த குருவேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் முழுவதும் குற்ற செயல்களை தடுக்க மாவட்ட கண்காணிப்பாளர் ராஜராஜன்  தலைமையில் தனிப்படை அமைத்து  கண்காணித்து வந்தனர். அப்போது ராஜபாளையம் அடுத்த சுந்தரராஜபுரம் கிராமத்தில் குருவேந்திரன் என்பவர் தனது பைக்கில் 9 நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்து, அரை கிலா மான் கறி மற்றும் மூன்று தோட்டாக்கள் ஒரு டார்ச்லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்