பயணியிடம் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய திருடன் - துரத்தி பிடித்த காவலருக்கு குவியும் பாராட்டு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் பயணி ஒருவரிடம் செல்போனை திருடிக் கொண்டு ஓடியவரை, துரத்திப் பிடித்த காவலர் அகமது உசேனுக்கு, பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
பயணியிடம் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய திருடன் - துரத்தி பிடித்த காவலருக்கு குவியும் பாராட்டு
x
திருவண்ணாமலையை சேர்ந்த மணி நேற்று இரவு சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, அவரது சட்டைப் பையில் இருந்த செல்போனை ஒருவர் பறித்துக் கொண்டு ஓடியுள்ளார். இதனை அடுத்து மணி, திருடன் திருடன் என சத்தம் போட்டுள்ளார். அப்போது அங்கிருந்த காவலர் அகமது உசேன், ரிப்பன் மாளிகை வரை துரத்தி சென்று திருடனை பிடித்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தையும் புகைப்பட கலைஞர் ஒருவர் படம் பிடித்துள்ளார். அந்த காட்சியை  பார்த்த மக்கள் அந்த காவலரை பாராட்டினர். இதனைத் தொடர்ந்து மணி அளித்த புகாரில் போலீஸார் நடத்திய விசாரணையில், செல்போனை திருடியவர் தர்மபுரியை சேர்ந்த மஞ்சு  என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அவரை புழல் சிறையில் அடைத்தனர். தகவலறிந்த சென்னை மாநகர காவல் ஆணையர் காவலர் அகமது உசேனை நேரில் அழைத்து பாராட்டி பரிசு அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்