தலை முடி பறந்து வந்ததால் - தலையை வெட்டிய கொடூரம்

பெண்ணுக்கு தலையில் அரிவாள் வெட்டு
தலை முடி பறந்து வந்ததால் - தலையை வெட்டிய கொடூரம்
x
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுக்காவை சேர்ந்த கூடலூர் கிராமத்தில், வசித்துவரும் பிரியா என்ற பெண்ணிற்கும், நாகரத்தினம் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. பிரியா வீட்டு கழிவு நீர் நாகரத்தினம் வீடு வரை வந்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரியாவை பழிவாங்க எண்ணிய நாகரத்தினம், பிரியாவின் தலைமுடி பறந்து வருவதை காரணமாக கூறி, இனி தலைமுடி என் வீட்டிற்கு வந்தால், தலையை வெட்டிவிடுவேன் என கூறியுள்ளார். இதில் மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, நாகரத்தினம்,  கத்தியை எடுத்து பிரியாவின் தலையில் வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த பிரியா, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமுடி பறந்து வந்ததால், தலையை வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்