டாஸ்மாக் கடைகளை 2 மணிக்கு மேல் ஏன் திறக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரின் ஜாமீன் மனு மீதமான விசாரணை நேற்று நடைபெற்றது.
டாஸ்மாக் கடைகளை  2 மணிக்கு மேல் ஏன் திறக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
x
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், தமிழகத்தில்  டாஸ்மாக்  பார்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெறவில்லை என்றால் ஏழு நாட்களில் மூடப்படும் என்று உறுதியளித்தார். இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பார்களில் அதிரடி சோதனை நடத்தி தரமான உணவு பொருள் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், டாஸ்மாக் கடைகளை  பிற்பகல் 2 மணிக்கு மேல்  ஏன் திறக்கக் கூடாது என்ற கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  இது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு  உத்தரவிட்டனர்.



Next Story

மேலும் செய்திகள்