முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் திருட்டு : ப.சிதம்பரம் வீட்டு பணிப்பெண்கள் 2 பேர் கைது

முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் திருட்டு : ப.சிதம்பரம் வீட்டு பணிப்பெண்கள் 2 பேர் கைது
x
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிதம்பரத்தின் வீட்டில் நகை, பணம் மற்றும் பட்டுப்புடவைகள் திருடு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வீட்டின் பூட்டு உடைக்கப்படாததால், அங்கு வேலை செய்பவர்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும், சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, பணிப்பெண்கள் வெண்ணிலா, விஜி ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவர்களிடம் விசாரித்தபோது, திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, வெண்ணிலா, விஜி இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான நகை, ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் 6 பட்டுப்புடவைகளை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பிறகு, இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்