பேராசிரியர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தீக்குளிக்க முயற்சி

சிவகங்கையில் அரசு கல்லூரி மாணவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேராசிரியர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தீக்குளிக்க முயற்சி
x
மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு பொருளாதாரம் படித்து வரும் மாணவன் கார்த்திக் ராஜா, ஒழுங்காக முடி வெட்டி வராததால், துறைத் தலைவர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பெற்றோரை அழைத்து வரச்சொல்லி வகுப்பறைக்குள் மாணவரை அனுமதிக்கவில்லை என்றும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் ராஜா, கல்லூரி வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை சக மாணவர்கள் காப்பாற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.



ஆசிரியை அடித்ததில் காயமடைந்த மாணவன் 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கஸ்தம்பாடியில்  உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் திஸ்வராம் என்ற மாணவனை ஆசிரியர் இரும்பு ஸ்கேலால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவன் தன் பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளியின் முன் திரண்ட மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



Next Story

மேலும் செய்திகள்