சட்டப்பேரவை கூட்டதொடர் இன்றுடன் நிறைவு - லோக் ஆயுக்தா மசோதா தாக்கலாகிறது

தமிழக சட்டப்பேரவையில், லோக் ஆயுக்தா சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
சட்டப்பேரவை கூட்டதொடர் இன்றுடன் நிறைவு - லோக் ஆயுக்தா மசோதா தாக்கலாகிறது
x
தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து வரும் 10-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மே 29-ஆம் தேதி தொடங்கிய நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர், இன்றுடன் முடிவடைகிறது. எனவே லோக் ஆயுக்தா சட்ட மசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்