"மதுபான கடையை மூட வேண்டும்" - புதுச்சேரி அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரியில் மாஹே பகுதியில் இயங்கிவந்த மதுபானக்கடையை நெடுங்காடு பகுதியில் அமைக்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது.
மதுபான கடையை மூட வேண்டும் - புதுச்சேரி அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு
x
புதுச்சேரியில் மாஹே பகுதியில் இயங்கிவந்த  மதுபானக்கடையை நெடுங்காடு பகுதியில் அமைக்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து தேவமணி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் மக்களின் கோரிக்கையை ஏற்று, அதை நிராகரித்து மார்ச் மாதம் உத்தரவிடப்பட்டது. ஆனால், கடந்த ஜூன் 15ம் தேதி  மதுபானக் கடை அங்கு திறக்கப்பட்டது. இதனை எதிர்த்து, மீண்டும் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர், கடையை உடனே மூட உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்