30 ஆண்டுகளுக்கு மேலாக மின்வசதி இல்லாத கிராம மக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் ஏ.புனவாசல் பகுதியை சேர்ந்த 40 குடும்பங்களை சேர்ந்தவர்கள், 30 ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வசதி இல்லாமல் வசித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள ஏ.புனவாசல் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்வசதி இல்லாமல் தவித்து வருகின்றன. மின் வசதி இல்லாததால் இரவு நேரத்தில் படிக்க முடியாமல் சிரமப்படுவதாக அப்பகுதி குழந்தைகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒருசில பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதையே நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.
செல்போனைக் கூட சார்ஜ் செய்ய முடியவில்லை என கூறும் அவர்கள், இரவு நேரத்திலும், வெயில் காலங்களிலும் பச்சிளம் குளந்தைகளை வைத்துள்ளவர்கள் மின்விசிறியை பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர். மின்வசதி இல்லாமல் தவிக்கும் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்யவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story