ரவுடி ஆனந்தனின் முக்கிய கூட்டாளி தற்கொலை முயற்சி

என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தனின் முக்கிய கூட்டாளியான புலி முருகன் தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரவுடி ஆனந்தனின் முக்கிய கூட்டாளி தற்கொலை முயற்சி
x
ராயப்பேட்டை காவலர் ராஜவேலு தாக்கப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளியான ரவுடி ஆனந்தன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். காவலர் ராஜவேலு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வேல்முருகன், அஜித்குமார், சீனு, மகேஷ் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ரவுடி ஆனந்தனின் கூட்டாளியான புலி முருகன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து போலீசார் அவரை தேடி வந்தனர். இதனை அறிந்த புலி முருகன், நேற்று மாலை திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், என்கவுன்ட்டர் பயத்தில் தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்