10 வருடங்களாக மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம் - ஓமலூரை அதிர வைத்த சில்மிஷ ஆசிரியர்

x

ஓமலூர் அருகேயுள்ள நடுப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு வையம்பட்டியை சேர்ந்த ராஜமாணிக்கம் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், தன்னிடம் பயிலும் மாணவிகளை டியூசன் எடுப்பதாக கூறி தனியே அழைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து தன்னை காதலிக்க கோரி ராஜமாணிக்கம் தொல்லை கொடுத்து வந்த நிலையில், மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். உடனே, ஆசிரியரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஆசிரியர் ராஜமாணிக்கத்தை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்ற நிலையில், தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், 50 வயதான ராஜமாணிக்கத்திற்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதும், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அவர் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், சுமார் 10 வருடங்களாக இதே போல் பல மாணவிகளிடம் ராஜமாணிக்கம் பாலியல் ரீதியாக அத்துமீறியது தெரியது வர, போக்சோவின் கீழ் ஆசிரியர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்