இந்தியா - பாக். போட்டி... தங்க மகன் சொன்ன முக்கிய விஷயம்

x

சர்வதேச விளையாட்டுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் கடும் போட்டியாளர்களாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கூறியுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தையும் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நீரஜ் சோப்ரா, ஐரோப்பிய வீரர்களை பின்னுக்குத்தள்ளி பதக்கம் வென்றது சிறப்பானது எனக் கூறினார். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி ஆசிய போட்டிகளிலும் எதிரொலிக்கும் என்றும் நீரஜ் சோப்ரா கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்