ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர்...முதல் சுற்றில் பி.வி.சிந்து கொடுத்த ஷாக்

x

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து இந்திய வீராங்கனை பி. வி. சிந்து வெளியேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சீன வீராங்கனை ஷாங் யிமானை சிந்து எதிர்கொண்டார். இதில் சிந்துவை 21-க்கு 12, 21-க்கு 13 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி, சீன வீராங்கனை 2ம் சுற்றுக்கு முன்னேறினார். சமீபத்தில் நடந்த கொரிய ஓபன் தொடரிலும் முதல் சுற்றுடன் வெளியேறிய சிந்து, தற்போதும் முதல் சுற்றுடன் வெளியேறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்