IPL 2022 | பெங்களூரு vs கொல்கத்தா போட்டியில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள்! | RCB vs KKR

ஐபிஎல் தொடரில் பெங்களூரு-கொல்கத்தாவிற்கு இடையேயான போட்டியில் நடந்த சுவராஸ்யமான சம்பவங்களைத் தற்போது பார்ப்போம்.
x
ஐபிஎல் தொடரில் பெங்களூரு-கொல்கத்தாவிற்கு இடையேயான போட்டியில் நடந்த சுவராஸ்யமான சம்பவங்களைத் தற்போது பார்ப்போம். கொல்கத்தாவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு வீழ்த்தியதன் மூலம், ஐபிஎல் தொடரில் கேப்டனாக டூபிளஸ்ஸி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார். பெங்களூரு பவுலர் ஹர்ஷல் படேல், 4 ஓவரில் 19 பந்துகள் ரன்னே கொடுக்காமல், 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். கொல்கத்தாவின் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பெங்களூரு பவுலர் ஹசரங்கா, ஆட்டநாயகன் விருதையும் வென்றார். விக்கெட் எடுத்த பிறகு பிரபல கால்பந்து வீரர் நெய்மரைப்போல் ஹசரங்கா கொண்டாட்டத்தில் ஈடுபட்டது, ரசிகர்களைக் கவர்ந்தது. சேசிங்கில் முதல் 3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணியும் தடுமாறியது. என்றாலும், கடைசி ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து, ஆட்டத்தை வெற்றிகரமாக தினேஷ் கார்த்திக் ஃபினிஷ் (Finish) செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்