"பாகிஸ்தானில் இருந்து வந்தேனா?"- மல்யுத்த வீரர் வீரேந்திர சிங் அதிருப்தி

காது கேளாத விளையாட்டு வீரர்கள், பாரா வீரர்களாக அங்கீகரிக்கப்படாததற்கு, மாற்றுத்திறனாளி மல்யுத்த வீரர் வீரேந்திர சிங் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.
x
காது கேளாத விளையாட்டு வீரர்கள், பாரா வீரர்களாக அங்கீகரிக்கப்படாததற்கு, மாற்றுத்திறனாளி மல்யுத்த வீரர் வீரேந்திர சிங் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

ஹரியானாவைச் சேர்ந்த காதுகேளாத மாற்றுத்திறனாளி மல்யுத்த வீரர் வீரேந்திர சிங்... காது கேளாதவர்கள் பாரா விளையாட்டு வீரர்கள் பிரிவில் சேர்க்கப்படாத நிலையில், தன்னைப் போன்றவர்களை அங்கீகரிக்க வேண்டும் என வீரேந்திர சிங் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், தனக்கு எப்போது சம உரிமை வழங்கப்படும் என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரிடம் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தான் பாகிஸ்தானில் இருந்து வந்தேனா என்றும், எப்போது தனது கோரிக்கை தொடர்பாக குழு அமைக்கப்படும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். தனக்கு அநீதி இழைக்கப்படாது எனக் கூறியதை பிரதமர் மோடி யோசித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் அதிருப்தி தெரிவித்து உள்ளார். இதனிடையே, வீரேந்திர சிங்கிற்கு உரிய மரியாதைகள் அளிக்கப்பட்டு வருவதாக ஹரியானா விளையாட்டுத்துறை தெரிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்