பெங்களூருவை வீழ்த்தியது பஞ்சாப் - இறுதி பந்தில் திரில் வெற்றி

ஐ.பி.எல் 31 வது போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி பஞ்சாப் திரில் வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூருவை வீழ்த்தியது பஞ்சாப் - இறுதி பந்தில் திரில் வெற்றி
x
டாஸ்வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூரு அணியில், அதிக பட்சமாக கேப்டன் கோலி 48 ரன்கள் எடுத்தார். மற்ற வீர‌ர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்த‌து. பஞ்சாப் அணி சார்பாக தமிழக வீர‌ர் முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில்,கே.எல்.ராகுல் 61, அகர்வால் 45, கெய்ல்,53 என வந்த வீர‌ர்கள் அனைவரும் தங்கள் பங்கிற்கு அதிரடி காட்டினர். இறுதி ஓவரில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், சஹால் சிறப்பாக பந்துவீசினார். கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டபோது, கெய்ல் ரன் அவுட் ஆக, தொடர்ந்து வந்த பூரான் சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்