ஐ.பி.எல் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி - பஞ்சாப் வீரர் அகர்வால் போராட்டம் வீண்

பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி - பஞ்சாப் வீரர் அகர்வால் போராட்டம் வீண்
x
பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் சேர்த்தது. தொடக்க  வீரர்கள் சொதப்பிய நிலையில் இறுதிக்கட்டத்தில் ஸ்டாய்னிஸ் அதிரடியாக ஆடி அரை சதம் விளாசினார். பஞ்சாப் தரப்பில்  ஷமி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

சூப்பர் ஓவரில் பின்தங்கிய பஞ்சாப் - 2 பந்தில் 3 ரன் எடுத்து டெல்லி வெற்றி 

158 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியில் அகர்வால்  அபாரமான ஆட்டதால் 89 ரன்கள் குவித்தார். இறுதி இரண்டு பந்துகளில் ஒரு ரன் தேவைப்பட்டபோது அகர்வால், ஜோர்டன் ஆட்டம் இழந்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.  சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 ரன்களை மட்டுமே எடுத்தது.  இதனை அடுத்து 2 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து டெல்லி அணி வெற்றி பெற்றது.

3-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - ஹைதராபாத் மோதல் - கேப்டன் கோலி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவல்

ஐபிஎல் தொடரின்,  3வது லீக் ஆட்டத்தில்  விராட் கோலி  தலைமையிலான பெங்களூரு அணி,  டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியை எதிர்கொள்கிறது.  இவ்விரு அணிகளும் இதுவரை மோதியுள்ள  15 ஆட்டங்களில் ஹைதராபாத் 8 முறையும் பெங்களூரு 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.  தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு களம்  இறங்கும் கேப்டன் கோலியின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது.



Next Story

மேலும் செய்திகள்