13வது ஐபிஎல் தொடர் இன்று தொடக்கம்:முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல் - எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு ?

13வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு..?
13வது ஐபிஎல் தொடர் இன்று தொடக்கம்:முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல் - எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு ?
x
சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் மோதல் போல , ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸின் மோதல் பார்க்கப்படுகிறது. இதற்கான முக்கிய காரணம் இறுதி வரை விட்டு கொடுக்காமல் மன உறுதியுடன் போராடும் வீரர்களால் தான். இந்த இரு அணிகளுக்கு இடையேயான பல ஆட்டங்கள் இறுதி ஓவரில் தான் முடிவு பெற்று இருக்கிறது.
கோப்பைகள் வசம் பார்க்கும் பொழுது 12 சீசன்களில் விளையாடி மும்பை அணி 4 முறையும் , 10 சீசன்களில் விளையாடி சென்னை அணி 3 முறையும் வென்று இருக்கிறது. இந்த இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 28 முறை மோதி உள்ளனர் , இதில் சென்னை அணி 11 முறையும் மும்பை அணி 18 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இந்த இரு அணிகளுள் மோதிய இறுதி போட்டி உள்பட 4 போட்டிகளில் மும்பை அணியே வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்  ரசிகர்களின் கரகோஷங்கள் இன்றி களம் காண உள்ளனர். ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி , பேட்டிங்கிலும் , பந்து வீச்சிலும் சிறப்பான வீரர்களை உள்ளடக்கிய அணியாக திகழ்கிறது. மறுபுறம் கேப்டன் தோனியை பெரிதும் நம்பி களம் இறங்கும சென்னை அணி அதிக அனுபவம் கொண்ட வீரர்களை உள்ளடக்கியது. குறிப்பாக சென்னை அணியின் தூண் என கருதப்படும் சுரேஷ் ரெய்னா இல்லாதது பின்னடைவாக கருதப்படுகிறது.
ரோகித் , பாண்டியா சகோதரர்களின் அதிரடி , பும்ரா மற்றும் போல்ட்டின் வேகத்தை சமாளித்து விட்டால் சென்னை அணி வெற்றி பெற முடியும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்