சென்னை அணியில் விளையாட போகும் 11 வீரர்கள் யார், யார் ?

நடப்பு ஐபிஎல் தொடரில் , சி.எஸ்.கே அணியில் இடம்பெற உள்ள 11 வீரர்கள் யார்..?
சென்னை அணியில் விளையாட போகும் 11 வீரர்கள் யார், யார் ?
x
மார்ச் மாதத்தில் நடைபெறவிருந்த 13வது ஐபிஎல் தொடர் கொரோனா தாக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ம் தேதி கடும் கட்டுபாடுகளுடன் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. 
முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் - 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. சொந்த காரணங்களுக்காக நட்சத்திர வீரர் ரெய்னா , ஹர்பஜன் சிங் ஆகியோர் தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில் , சென்னை அணியில் யார் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது. கடந்த ஆண்டுகளை போலவே , இந்தாண்டும் தொடக்க ஆட்டக்காரராக ஷேன் வாட்சன் களமிறங்க உள்ளார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் களமிறங்குகிறார். ரெய்னா இல்லாத 1 டவுன் இடத்தில் 2018ல் சென்னை அணிக்காக அதிக ரன்கள் குவித்த அம்பத்தி ராயுடு இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பாப் டூ பிளெஸிஸ் , கேப்டன் தோனி , அவரை தொடர்ந்து கேதர் ஜாதவ் ஆகியோர் அடுத்தடுத்து களமிறங்குவார்கள்.. சுழற்பந்து வீச்சை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜாவும் , பியூஷ் சாவ்லாவும் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்..வேகப்பந்து வீச்சை பொறுத்த மட்டில் தீபக் சஹார் , லுங்கி நிகிடி , சர்துல் தாகூர் ஆகியோரை சென்னை அணி அதிகம் நம்பி உள்ளது. பிராவோ, இம்ரான் தாஹிர் , மிட்செல் சாட்னர் ஆகியோர் கரிபீயன் லீக்கை முடித்து கொண்டு அண்மையில் துபாய்க்கு வருகை தந்தனர். தனிமைபடுத்தலுக்கு பிறகு அவர்கள் பயிற்சியை தொடங்குவார்கள் என்பதால் முதல் போட்டியில் பங்கேற்க குறைவான வாய்ப்பே இருக்கிறது....


Next Story

மேலும் செய்திகள்