6-வது ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அட்லடிகோ டி கொல்கத்தா

6-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில், அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
6-வது ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அட்லடிகோ டி கொல்கத்தா
x
கோவாவில் நடந்த இறுதிப்போட்டியில், இருமுறை சாம்பியன்களான சென்னையின் எப்.சி. மற்றும் அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெற்றது. போட்டி தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த கொல்கத்தா அணி வீரர்கள், 10-வது மற்றும் 48-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர். சென்னை தரப்பில் 69-வது நிமிடத்தில் வல்ஸ்கிஸ் ஒரு கோல் அடித்த நிலையில், பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் மற்றுமொரு கோல் அடித்த கொல்கத்தா அணி, 3க்கு - 1 ஒன்று கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணியின் ஜாவியர் ஹெர்னாண்டஸ் இருகோல்கள் அடித்து, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். 


Next Story

மேலும் செய்திகள்