2 ஆண்டுகளுக்கு பிறகு ஐதராபாத் அணியின் கேப்டனாக வார்னர் நியமனம்

வரும் ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு ஐதராபாத் அணியின் கேப்டனாக வார்னர் நியமனம்
x
வரும் ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி, ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெ​ஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய வார்னருக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வார்னர், நீக்கப்பட்டார். தற்போது மீண்டும் அவருக்கு ஐதராபாத் அணி கேப்டன் பொறுப்பை வழங்கியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்