ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்
x
மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தன. இரண்டாம் பாதியின் 54வது நிமிடத்தில் சென்னை வீரர் சாங்தேவை இடறி விட்டதால் மும்பை வீரர் தாஸிற்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் சென்னை அணிக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பில் கேப்டன் லூசியன் கோயன் கோல் அடித்தார். இறுதியில் சென்னை அணி 1க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்