பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் மெழுகு சிலை திறப்பு
பிரேசில் அணியின் கால்பந்து ஜாம்பவான பீலேவின் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது.
பிரேசில் அணியின் கால்பந்து ஜாம்பவான பீலேவின் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. 1970ஆம் ஆண்டு உலகக் கோப்பையை பிரேசில் அணி வென்றதன் 50வது ஆண்டை கொண்டாடும் விதமாக, இந்த சிலையை, அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் திறந்துள்ளது. தமது மெழுகு சிலையை 79 வயதான பீலே நேரில் சென்று கண்டு ரசித்தார். 1970ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில், களமிறங்கிய அனைத்து போட்டியிலும் பீலே தலைமையிலான பிரேசில் அணி வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Next Story