இந்திய அணியில் நிரந்திர இடம் பிடித்த ராகுலை சீண்டும் மீம்ஸ்...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு கனகச்சிதமாக பொருந்தியுள்ளார்,இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்....
இந்திய அணியில் நிரந்திர இடம் பிடித்த ராகுலை சீண்டும் மீம்ஸ்...
x
தொடக்க ஆட்டக்காராக களமிறங்கும் கே.எல்.ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின், முதல் போட்டியில் 3வது விக்கெட்டுக்கு களமிறங்கினார். இந்த போட்டியில் ரிஷப் பந்திற்கு காயம் ஏற்பட்டதால் , ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார். ராஜ்கோட்டில் நடைபெற்ற 2வது ஒரு நாள் போட்டியில் ராகுல் பின்வரிசையில் களமிறங்கி ஆதிரடியாக ஆடி 80 ரன்கள் விளாசினார். ஆட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோலி, ராகுல் எந்த வரிசையிலும் களமிறங்கினாலும் அதிரடி காட்டுவார் என தெரிவித்தார்... அங்கு தான் வினை ஆரம்பித்தது. மீம் கிரியேட்டர்களுக்கு புதிய Content கிடைத்து விட்டது. கவுண்டமணி ஒரு படத்தில் யாராக இருந்தாலும் வெட்டுவேன் என வசனம் பேசியிருப்பார், அதை ராகுலுக்கு பயன்படுத்தி எந்த வரிசையில் களமிறங்கினாலும் அதிரடி காட்டுவேன் என்று பகிர தொடங்கினர். பின்னர் ராகுல் பந்து வீச்சு பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் ஒன்று வெளியானது, அதையும் மீமாக மாற்றி இனி இந்திய அணியில் பந்துவீச்சாளர் பிரச்சனை கிடையாது என பதிவிட்டனர். இதனிடையே தவானுக்கும், பந்திற்கும் ராகுல் வில்லனாக அமைந்து விட்டார் என மீம் கிரியேட்டர்கள் மீம்ஸ் உருவாக்கினர். நியூசிலாந்து தொடருக்காக இந்தியா வீரர்கள் ஆக்லாந்து புறப்பட்ட விமானத்தில் விமான ஓட்டி கடைசி நேரத்தில் வராத காரணத்தால், கோலி கேட்டு கொண்டதற்கு இணங்க ராகுல் விமானத்தை இயக்கியதாக வெளியான மீம்கள் இணையத்தை சிரிப்பலையில் அதிர வைத்தன. அணியில் வாய்ப்பு கிடைக்காதா என சாம்சன், சூர்யகுமார் யாதவ், விஜய் சங்கர் போன்ற வீரர்கள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில், கிடைத்த சிறு சிறு வாய்ப்புகளை பயன்படுத்தி ராகுல் தனக்கென நிரந்திர இடத்தை அணியில் பிடித்துகொண்டார் என்பது தான் உண்மை...


Next Story

மேலும் செய்திகள்