ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: கேரளா - கோவா ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் , கேரளா - கோவா அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: கேரளா - கோவா ஆட்டம் டிரா
x
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் , கேரளா - கோவா அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது.  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் நிமிடத்திலேயே கேளரா வீரர் செர்ஜியோ கோல் அடித்து அசத்தினார். இதனையடுத்து 41ஆவது நிமிடத்தில் கோவாவின் மோர்டடா கோல் அடித்து சமன் செய்தார். இரண்டாம் பாதியில் மோர்டடாவுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டதால் கோவா அணி 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டது . இதை பயன்படுத்தி கொண்ட கேரள அணி 59 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதனால் கேரளா வெற்றி பெரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் கூடுதல் நேரத்தில் கோவா அணி வீரர் லெனி கோல் அடித்ததால்  அந்த அணி தோல்வியில் இருந்து தப்பியது .

Next Story

மேலும் செய்திகள்