"இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகிறது" - ஸ்ரீகாந்த்

பார்வை குறைபாடு கொண்ட கிரிக்கெட் வீரர்கள் பணத்தை எதிர்பார்க்கவில்லை என்றும், அவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் போதும் என்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகிறது - ஸ்ரீகாந்த்
x
பார்வை குறைபாடு கொண்ட கிரிக்கெட் வீரர்கள் பணத்தை எதிர்பார்க்கவில்லை என்றும், அவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் போதும் என்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ரோட்டரி கிளப் சார்பில் சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பார்வை குறைபாடு கொண்ட இந்திய கிரிகெட் அணியின் பயிற்சியாளர் பேட்ரிக் ராஜ் குமாருக்கு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகள், அடுத்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளுக்கு பயிற்சியாக அமையும் என்று தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்