தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு

2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
x
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, பாரா விளையாட்டு வீராங்கனை தீபா மாலிக், ஆகியோர் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பேட்மிட்டன் பயிற்சியாளர் விமல்குமார், டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் சந்தீப் குப்தா, அதலெட்டிக்ஸ் பயிற்சியாளர் மொகிந்தர் சிங் தில்லான் ஆகியோருக்கு துரோணாச்சார்யா விருதுகள் வழங்கப்பட உள்ளது. அதெலட்டிக்ஸ் வீரர்கள் தஜிந்தர்பால் சிங் தூர், முகமது அனாஸ் யாஹியா, தமிழகத்தை சேர்ந்த பாடி பில்டிங் வீரர்  பாஸ்கரன், குத்து சண்டை வீராங்கனை சோனியா லேதர், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, ஹாக்கி வீரர் சிங்லென்சானா சிங், கபாடி வீரர் அஜய் தாக்கூர் உள்ளிட்ட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தயான்சந்த் விருதுகள் பல விளையாட்டு வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்