மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டி : தொடரை கைப்பற்றியது இந்தியா

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டி : தொடரை கைப்பற்றியது இந்தியா
x
குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்த‌து. முதலில் களமிறங்கிய கெயில் மற்றும் லூயிஸ் ஜோடி, அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்த வீர‌ர்கள் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் இழந்த நிலையில், அந்த அணி 35 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து, 240 ரன்கள் எடுத்திருந்த‌து. அப்போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து இந்திய அணிக்கு 255 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் கோலி பொறுப்பான ஆடத்தை வெளிப்படுத்தி சதம் கடந்தார். அவருடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருபுறம் அதிரடி காட்ட, இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 33 ஆவது ஓவரில் இலக்கை எட்டியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை இந்திய அணியின் கேப்டன் தட்டிச்சென்றார். 

Next Story

மேலும் செய்திகள்