டி.என்.பி.எல். கிரிக்கெட் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிபெற்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி
x
முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது. பொறுப்பாக ஆடிய ஹரிஷ்குமார் 39 ரன்களும், கோபிநாத் 37 ரன்களிலும் எடுத்தனர். பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் அணியின் வீரர்கள் சேப்பாக் வீரர் அலெக்ஸாண்டர் பந்து வீச்சில் சிக்கி ஆட்டமிழந்தனர். முடிவில் திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

Next Story

மேலும் செய்திகள்