திறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவது தான் டி.என்.பி.எல்யின் நோக்கம் - சந்திரசேகர்

நான்காவது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை நத்தத்தில் தொடங்குகிறது.
x
நான்காவது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை, நத்தத்தில் தொடங்குகிறது. நத்தம் தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் இந்திய அணி வீரர் கேதர் ஜாதவ் கலந்து கொள்ள உள்ளார். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை டி.என்.பி.எல். தொடர் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன.இதனிடையே நத்தத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சந்திரசேகர், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவது தான்  டி.என்.பி.எல்யின் நோக்கம் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்