இந்திய அணியில் அதிரடி மாற்றம் - பிசிசிஐ திட்டம்

டி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கு புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்திய அணியில் அதிரடி மாற்றம் - பிசிசிஐ திட்டம்
x
உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு அணியில் ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலிக்கு இடையே ஏற்பட்ட பிளவே காரணம் என வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு  ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி 20 உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதன்படி ரோகித் சர்மாவை ஒரு நாள் போட்டிக்கும், டி 20 போட்டிக்கும் கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்