பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டம்
x
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்ததை அடுத்து வருகிற ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் வரை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பின் தலைமை பயிற்சியாளர், துணை பயிற்சியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தகுதி அடிப்படையில் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்