அரையிறுதி போட்டியில் இந்தியா போராடி தோல்வி

உலக கோப்பை அரையிறுதி போட்டியில், இந்தியாவை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு நியூசிலாந்து அணி முன்னேறியுள்ளது .
அரையிறுதி போட்டியில் இந்தியா போராடி தோல்வி
x
மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் 240 ரன்கள் வெற்றி இலக்கை, நியூசிலாந்து  நிர்ணயித்தது. இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 49 புள்ளி 3 ஒவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே, 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி,  இறுதி போட்டிக்கு முன்னேறியது. நாளை, வியாழக்கிழமை நடைபெறும் மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்