"டி.என்.பி.எல் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு" - ஹேமங் பதானி

டி.என்.பி.எல் தொடர் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி தெரிவித்தார்.
x
டி.என்.பி.எல் தொடர், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி தெரிவித்தார்.திருச்சியில் டி.என்.பி.எல் தொடர் குறித்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹேமங் பதானி பங்கேற்றார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இந்த வருடம் 4வது ஆண்டாக டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.இத்தொடர் கடந்த 3 ஆண்டுகளாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாகவும்,இதில் விளையாடி திறமையை வெளிப்படுத்தும் இளைஞர்களுக்கு தமிழக அணி, ஐ.பி.எல். மற்றும் இந்திய அணிக்கும் விளையாட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்