ஐதராபாத் கனவை சிதைத்த பெங்களூரு?

ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் ஐதராபாத் அணி தோல்வியை தழுவியது.
ஐதராபாத் கனவை சிதைத்த பெங்களூரு?
x
பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோலி பந்துவீச தீர்மானித்தார். இதனையடுத்து, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 70 ரன்கள் சேர்த்தார். 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் சிம்ரன் ஹேட்மர் 75 ரன்களும், குர்கீராத் சிங் 65 ரன்களும் விளாச பெங்களூரு அணி 4 பந்துகள் எஞ்சிய நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் , ஐதராபாத் அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இன்று நடைபெறும், மும்பை, கொல்கத்தா அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வரும் முடிவை பொருத்தே ஐதராபாத் அணியின் எதிர்காலம் உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்