ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : சூப்பர் ஓவர் முறையில் மும்பை அணி வெற்றி

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் மும்பை அணி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : சூப்பர் ஓவர் முறையில் மும்பை அணி வெற்றி
x
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் மும்பை அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்தது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்களை எடுத்து போட்டியை சமன் செய்தது. இதனால் இறுதியில் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் எடுத்தது. இதனைதொடர்ந்து 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்